சண்டிகர்: அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அரியானா மாநிலத்தில் வருகிற 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மகேந்திராகர் என்ற இடத்தில் அரசு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் பிரசாரம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பதாக இருந்தது. ஆனால், திடீரென அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.