தேர்தல் பிரசாரத்தில் சோனியா ஆப்சென்ட்: அரியானாவில் காங். ஏமாற்றம்

சண்டிகர்: அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அரியானா மாநிலத்தில் வருகிற 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மகேந்திராகர் என்ற இடத்தில் அரசு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் பிரசாரம் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பதாக இருந்தது. ஆனால், திடீரென அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அரியானா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட  பதிவில், ‘தவிர்க்க முடியாத காரணங்களால் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் பிரசார கூட்டத்தில் பங்கேற்க முடியாவில்லை. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார்,’ என்று கூறப்பட்டுள்ளது.அரியானாவில் ஏற்கனவே கடந்த 14ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: