×

திருவல்லிக்கேணி அருகே பண பரிமாற்றம் செய்யும் ஊழியரை தாக்கி 8 லட்சம் கரன்சி வழிப்பறி: 2 பேர் கைது

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன் பட்டினத்தை சேர்ந்தவர் ரபியுதீன் (24). சென்னை மண்ணடியில் பணம் பரிமாற்றம் செய்யும் கலந்தர் என்பவரிடம் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த சின்னா என்பவர் வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், இந்திய ரூபாயை கலந்தரிடம் கொடுத்து, சவுதி அரேபியா பணம் மற்றும் அமெரிக்கா டாலர் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதன்படி, ேநற்று முன்தினம் இரவு ஊழியர் ரபியுதீனிடம் சவுதி அரேபியா பணம் 3.50 லட்சம் மற்றும் அமெரிக்கா டாலர் 4.50 லட்சம் என 8 லட்சம் வெளிநாட்டு கரன்சியை கொடுத்த கலந்தர், அதனை திருவல்லிக்கேணியில் உள்ள சின்னாவிடம் கொடுக்கும்படி கூறினார்.

பணத்துடன் அவர் திருவல்லிக்கேணி வந்தபோது, பல்லவன் சாலையில்  2 மர்ம நபர்கள் தாக்கி ₹8 லட்சம் வெளிநாட்டு கரன்சியை பறித்து தப்ப முயன்றனர். இவரது  சத்தம் கேட்டு 2 பேரையும் பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மதுரை மேலூர் கிடாரிபட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரமேஷ் (21), பாஸ்கரன் (37) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.



Tags : Tiruvallikeni , 2 employees arrested in Tiruvallikeni
× RELATED திருவல்லிக்கேணியில் தொடரும்...