மாற்றுத்திறன் பெண்ணிடம் சில்மிஷம் ஐடி நிறுவன ஊழியர் கைது

சென்னை: ராயலா நகர் கலாஷேத்ரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் புஷ்பராஜ் (28). ஐடி நிறுவன ஊழியர்். அதே குடியிருப்பில் மாற்றுத்திறன் இளம்பெண் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் போதையில் வீட்டிற்கு வந்த புஷ்பராஜ், வீட்டு வேலை முடிந்து அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டில் இறங்கி சென்ற மாற்றுத்திறன் இளம்பெண்ணை, திடீரென கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் வாய் பேச முடியாததால் அலறி துடித்துள்ளார். அப்போதும் புஷ்பராஜ் அந்த பெண்ணை விடாமல் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் ஓடிவந்து புஷ்பராஜிடம் இருந்து இளம்பெண்ணைை மீட்டனர். பின்னர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் புகாரை பெற்று, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றினர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது ெசய்தனர்.

Related Stories: