சென்னை: ரயில்வே காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு பெறுவது குறித்த வழிகாட்டு முகாம் எழும்பூரில் உள்ள ரயில்வே கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தலைமை வகித்தார். ரயில்வே ஐஜி வனிதா வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி உரையாற்றினார்.