சென்னை: மின்சார வாரியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உயர்த்தப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியை வரும் 23ம் தேதி வழங்குவதாக வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: தமிழக மின்சார வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் பண்டிகை காலத்தின்போது அகவிலைப்படி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தமிழக அரசு கடந்த 1.7.2019 அன்று, மாநில அரசு பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 17 சதவீதம் அகவிலைப்படி வழங்க ஆணையிட்டது.