டெல்லி :ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஐ, சிதம்பரம் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து. முன்னதாக கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளது, அவருக்கு ஆதரவாக ப.சிதம்பரம் செயல்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.