×

தீபாவளி பண்டிகை நேரத்தில் திருட்டை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்

சென்னை : சென்னை தி.நகரில் புதிய சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். தீபாவளி பண்டிகை நேரத்தில் திருட்டை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன், தீபாவளியையொட்டி தி.நகரில் மக்கள் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்ய கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் குறிப்பிட்டார். மேலும், கூடுதலாக 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Tags : Commissioner of Police ,Diwali ,festival ,theft , CCTV, Camera, Diwali, Festive, Police Commissioner, AK Viswanathan
× RELATED சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய...