உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை

டெல்லி :  உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார் நாக்பூரை சேர்ந்த சரத் அரவிந்த் பாப்டே. அயோத்தி வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு அளித்துவிட்டு ஓய்வு பெற உள்ளார் நீதிபதி ரஞ்சன் கோகாய். எஸ்.ஏ.பாப்டேவை தலைமை நீதிபதியாக்க கோரி மத்திய அரசுக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியுள்ளார். நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதத்தை பரிசீலித்து சட்ட அமைச்சகம் அதனை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க உள்ளது.

Related Stories: