மதுரை: துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் ஒலி பெருக்கி மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத் தகடுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் பயணிகள் அனைவரின் உடமைகளையும் சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் தீவிரமாக சோதனையிட்டனர்.