புதுடெல்லி: இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி காவலாளி கைது செய்யப்பட்டார்.வடமேற்கு டெல்லி பிதாம்புரா பகுதியில் உள்ள சிறுவர் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டரை வயது சிறுமி சேர்க்கப்பட்டாள்.
கடந்த 5ம் தேதி சிறுமியின் அந்தரங்கப்பகுதியில் வலி எடுப்பதாக கூறினாள். இதை சிறுமியின் தாய் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏதாவது அலர்ஜியாக இருக்கும் என்று விட்டுவிட்டார். அதன்பின் 4 நாள் விடுமுறை முடிந்து சிறுமி அக்டோபர் 9ம் தேதி பள்ளிக்கு செல்ல மறுத்தாள்.