புதுடெல்லி: அயோத்தி நில வழக்கின் இறுதி கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அகில இந்திய இந்து மகாசபா சார்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங், ராமர் பிறந்த இடம் குறித்த வரைபடம் ஒன்றையும், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என கூறும் புத்தகங்களையும் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சன்னி வக்பு வாரிய தரப்பு வக்கீல் ராஜீவ் தவான், ‘இது போன்ற ஆவணங்கள் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டது. அதனால், இவற்றை ஏற்கக் கூடாது,’ என கூறினார். ‘இவற்றை ஏற்கும்படி நான் வலியுறுத்த மாட்டேன்,’ என விகாஸ் சிங்கும் கூறினார். அதன்பின், ‘இந்த வரைபடத்தை என்ன செய்யட்டும்?’ என நீதிபதிகளிடம் ராஜீவ் தவான் கேட்டார். இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், ‘நீங்கள் அதை கிழித்தெறியலாம்,’ என்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வரைபடத்தை கிழித்த முஸ்லிம் தரப்பு வக்கீல் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்: பார் கவுன்சிலில் இந்து மகாசபா புகார்
- வழக்கறிஞர்
- உச்ச நீதிமன்றம்
- அயோத்தி
- பார் கவுன்சில். உச்ச நீதிமன்றம்
- இந்து மகாசபா
- பார் கவுன்சில்
- இந்து மகாசப மாநாடு