லண்டன்: இங்கிலாந்து - ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே புதிய பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான, பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பு உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் நேற்று தொடங்கியது. அது, இன்றும் நடைபெறுகிறது. இதில் ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 28 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.