விமானத்தில் கிடந்த 1.5 கிலோ தங்க கட்டி பறிமுதல்

திருச்சி: ஷார்ஜாவில் இருந்து நேற்று காலை திருச்சிக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று வந்தது. விமானத்தில், பாலிதீன் பேப்பரால் சுற்றப்பட்ட ஒரு பார்சல் சீட்டின் அடியில் கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து ஊழியர்கள்,  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டாக இருக்குமோ என அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டனர். பின்னர் பார்சலை பிரித்து பார்த்தபோது, ரூ.57  லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்ககட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்க கட்டியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை யார் கடத்தி வந்தது, மறைத்து வைத்திருந்த தங்கம் கீழே விழுந்து விட்டதா என்பது  குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: