மதுரை: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த வெங்கிடுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில். தமிழக ஊரகப்பகுதிகளில் 5,125 பெட்ரோல் பங்க்குகள் துவங்குவதற்கான டெண்டர் அறிவிப்பு எரிபொருள் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலனுக்கு எதிரானது. இதனால் தற்போது பங்க்குகள் வைத்திருப்போர் பாதிப்பர். எனவே, புதிய பங்க்குகள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல், மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எரிபொருள் நிறுவனங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.