நெல்லை: பாஜவுடன் கொள்கை ரீதியான ஒட்டோ, உறவோ அதிமுகவுக்கு கிடையாது என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். நெல்லையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேற்று அளித்த பேட்டி: எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவில் 13 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் இருந்தனர். பின்னர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக வளர்ச்சி அடைந்து ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் போல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.