சென்னை: கொடுங்கையூரை சேர்ந்த பார்வதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ம் ஆண்டு கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்.ஐ.க்கள் ஆறுமுகம், சதீஷ்குமார் ஆகியோர், என்னை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, லத்தி மற்றும் பூட்ஸ் காலால் தாக்கினர். பின்னர் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.