பஞ்சாப் அணியில் அஸ்வின் தொடர்வாரா? : புதிய பயிற்சியாளர் கும்ளே கருத்து

புதுடெல்லி: கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியின்  கேப்டன் அஸ்வின் அணியில் தொடர்வாரா  என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று அதன் புதிய பயிற்சியாளர் அனில் கும்ளே தெரிவித்தார். ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கேப்டன் அஸ்வின் ரவிசந்திரன், வரும் சீசனில் டெல்லி அணிக்கு மாறப்போவதாக  பேச்சு உள்ளது. இது  குறித்து அணியின் புதிய பயிற்சியாளர் அனில் கும்ளே, ‘  இப்போதுதான் பஞ்சாப் அணியுடன் இணைந்துள்ளேன்.

அணியில் இடம் பெற உள்ள வீரர்கள் குறித்து இதுவரை விவாதிக்கவில்லை. அது குறித்து பேச இன்னும் போதுமான  நேரம் உள்ளது. அணி குறித்து ஏதாவது முடிவு எடுத்தால் அது குறித்து கட்டாயம் எல்லோருக்கும் அறிவிக்கப்படும். இதுவரை அப்படி எந்த முடிவும் எடுக்கவிலை என்று கூறினார். அஸ்வின் குறித்த கேள்விக்கு கும்ளே நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும், ‘அணியில்  மாற்றம் செய்யும் திட்டம் அவரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: