டெல்லி: ப.சிதம்பரம் மீதான வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபில் வாதம் செய்து வருகிறார். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டிய அவசியம் எதும் இல்லை என வாதாடி வருகிறார். நீதிமன்ற காவலில் இருந்த போதே ப.சிதம்பரத்தை ஏன் அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 2 ஆண்டுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட வழக்கில் இதுவரை அமலாக்கத்துறை என்ன செய்தது எனவும் கேள்வி எழுப்பினார்.