சென்னை: அதிமுகவின் 48ம் ஆண்டு தொடக்க விழா தினத்தையொட்டி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சியின் துவக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் அவை தலைவர் மதுசூதனன், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சட்டசபையின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.