ரியாத்: சவூதி அரேபியாவின் மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவின் மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது பேருந்து மோதியது.