×

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது

பல்லாவரம்:  சென்னை பழைய பல்லாவரம், பரமேஸ்வரன் தெருவை சேர்ந்தவர் எட்டியப்பன் (35). அதேப் பகுதியில் உள்ள தனியார் நிறுவன கூலி தொழிலாளி. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து  எட்டியப்பன் தனது வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது இவரது வீட்டின் அருகே வசிக்கும் 4 வயது சிறுமி வெளியில் விளையாடி கொண்டிருந்தாள்.அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்த எட்டியப்பன் சாக்லெட் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் வெளிக்கதவை பூட்டி விட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு ஓடி வந்து எட்டியப்பனின் வீட்டு கதவை உடைத்து, சிறுமியை மீட்டனர். மேலும், எட்டியப்பனை பிடித்து தர்மஅடி கொடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்டியப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட எட்டியப்பன் தனது மனைவி தீக்குளித்து பலியான வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Pok ,sex harassment ,Plaintiff , Sexual harassment , girl, Plaintiff ,Pok
× RELATED கல்லூரி மாணவன் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து