புழல்: சோழவரம் அடுத்த பண்டிகாவனூர், பெரியபாளையம் செல்லும் சாலையின் அருகே ஏராளமான தனியார் குடோன்கள் உள்ளன. இங்குள்ள ஒரு சிகரெட் மற்றும் புகையிலை ேசமிக்கும் குடோனில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்ததும் அருகில் இருந்த குடோன் ஊழியர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டு இருந்த பல கோடி மதிப்பு சிகரெட் பண்டல்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இடி தாக்கி தீ விபத்து ஏற்பட்டதா? யாராவது தீ வைத்தர்களா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.