சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கணவரிடம் இருந்து பிரித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி முசாபர் பகதூர் தெருவை சேர்ந்தவர் ரசியாபானு (30). இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (25) என்ற வாலிபருடன் ரசியா பானுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பிறகு, ‘தன்னை திருமணம் ெசய்து கொள்ளும் படி’’ காதலன் அப்துல் அஜீசிடம் ரசியா பானு கூறி வந்துள்ளார். அதற்கு அப்துல் அஜீஸ், ‘உன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு குழந்தையை கணவரிடம் விட்டு விட்டு வந்தால் திருமணம் ெசய்து கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். அதன்படி, கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது குழந்தையையும் விட்டுவிட்டு ரசியா பானு வந்துள்ளார். இதையடுத்து அப்துல் அஜீஸ், ரசியா பானு பல இடங்களில் சுற்றி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.