சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி அகில இந்திய முகவர்கள் சங்கம் (எல்ஐசி) சார்பில் நாடு தழுவிய அளவில் கோட்ட அலுவலங்களில் தர்ணா போராட்டம் நடந்தது. சென்னை கோட்ட அலுவலகம் முன்பு இப்போராட்டம் சங்க தலைவர் நாகலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில், எல்ஐசி முகவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்குவது, குழு காப்பீட்டை 25 லட்சமாக உயர்த்துவது, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் காலக்கெடுவை 5 ஆண்டுகளாக உயர்த்துவது, எல்லா முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி வழங்குவது, உள்ளிட்ட கோரிக்கைகளை எல்ஐசி நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தினர். அதேபோன்று, எல்ஐசி பாலிசிகள் மீதான ஜிஎஸ்டியை நீக்குவது, தனியார்மய தாராள மயத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினர்.