மிட்டாய் காட்டி குழந்தைகளை பிடிப்பது போல அமமுகவில் சிலரை பிடித்து பூச்சாண்டி காட்டுகின்றனர்: டிடிவி.தினகரன் அறிக்கை

சென்னை: மிட்டாய் காட்டி குழந்தைகளை பிடிப்பது போல அமமுகவில் சிலரை பிடித்துசென்று பூச்சாண்டி காட்டுகின்றனர். கட்சியை மீட்பதே இலக்கு என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய கைகளில் காலம் வழங்கியுள்ளது. சட்டத்தின் வழி நின்று போராடுவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  என்ற இயக்கத்தை ஜனநாயக ஆயுதமாக உருவாக்கினோம்.

மிட்டாய் காட்டி குழந்தைகளைப் பிடிப்பது போல நம்மிடம் இருந்த சில பலவீனர்களைப் பிடித்துச் சென்று, ‘இந்த இயக்கம் அவ்வளவுதான்’ என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் அரசியலில் பின்னடைவைச் சந்திக்காத  இயக்கமோ, தலைவர்களோ உலகில் இல்லை. இயக்கத்தை மீட்டெடுக்கவும், மக்கள் நலக் கொள்கைகளை வாழ்விப்பதற்கும் அண்ணாவின் பெயரால், எம்.ஜி.ஆர். இயக்கம் கண்ட இந்நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: