சென்னை: மிட்டாய் காட்டி குழந்தைகளை பிடிப்பது போல அமமுகவில் சிலரை பிடித்துசென்று பூச்சாண்டி காட்டுகின்றனர். கட்சியை மீட்பதே இலக்கு என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய கைகளில் காலம் வழங்கியுள்ளது. சட்டத்தின் வழி நின்று போராடுவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை ஜனநாயக ஆயுதமாக உருவாக்கினோம்.