×

போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். தொழிலாளர்களை பல கிலோ மீட்டர் இயக்கச் சொல்லி  கட்டாயப்படுத்துவதும், டீசல் மிச்சப்படுத்த வேண்டும் எனவும் கட்டாயப்படுத்துகின்றனர். பொது சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கருத்து, தங்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்ற  கோரிக்கையாக உள்ளது. இதுவே தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் பிரதான கோரிக்கையாகும். எனவே, ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர் ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அவர்களை  அரசு ஊழியர்களாக அறிவிக்க கேட்டுக் கொள்கிறேன்.


Tags : Transport workers ,servants ,Vijayakanth , Transport workers, civil servants, Vijayakanth
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...