×

சாத்தூர் கோயிலில் ஓபிஎஸ் திடீர் பூஜை

சாத்தூர்: நாங்குநேரியில் பிரசாரத்துக்கு செல்லும் வழியில் சாத்தூர் கோயிலில் ஓபிஎஸ் திடீர் பூஜை மேற்கொண்டார். தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன்  முடிவுகள் அக். 24ல் வெளியாகிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாங்குநேரி பிரசாரத்திற்கு செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, வன்னிவிநாயகர்  கோயிலில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை திடீரென சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை மேற்கொண்டார். கோயில் நிர்வாகம் சார்பில், அவருக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.



Tags : OBS Sudden Pooja ,Sattur Temple. Sathur Temple , Chatur Temple, OPS
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...