நாகை: நாகை சுற்றுவட்டாரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.