தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் முல்லை பெரியாற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிரவீனின் உடல் குண்டல் நாயக்கன்பட்டியில் சுமார் ஐந்து நாட்களுக்கு பின்பு சடலமாக மீட்கப்பட்டது. உத்தமபாளையம் ஆர்.சி தெருவை சேர்ந்த மேத்யூ நிர்மலா தம்பதியின் மகன் பிரவீன். இவர் வீரபாண்டி அரசு கல்லுாரியில் பயின்று வருகிறார். இவர் கடந்த 10 தேதி தனது நண்பர்களுடன் உத்தமபாளையம் முல்லை பெரியாறு பகுதியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து, பிரவீனை தேடும் பணிகளை துரிதப்படுத்தக்கோரி அவருடைய உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பணிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைத்து, பின்னர் அதிகரிக்கப்பட்டது.