திருமங்கலம்: திருமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த பெண் மயிலை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் போராடி மீட்டனர். திருமங்கலம் அடுத்த சிந்துபட்டி அருகேயுள்ள சலுப்பபட்டி கிராமத்தில் உள்ள கிணற்றின் அருகே மயில் கூட்டம் இரை தேடி சென்றன. அப்போது தெருநாய்கள் மயில் கூட்டத்தை விரட்டியதால், ஒரு பெண் மயில் மட்டும் தவறி அருகேயுள்ள கிணற்றில் விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இல்லாததால் விழுந்த மயில் பறந்து மேலே வர பார்த்தது. ஆனால் பறந்து வெளியே வரும் போது அருகேயிருந்த மரத்தின் கிளை தட்டிவிடவே மயிலால் வெளியே வரமுடியாமல் மீண்டும் கிணற்றில் விழுந்தது.