சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் முன்னதாகவே தமிழக்த்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என கூறப்படுகிறது. தமிழகத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.