பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி அந்த அணையின் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீரானது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல கபினி அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. முழு கொள்ளளவான 84 அடியில், தற்போது கபினி அணையின் நீர்மட்டம் 83.5 அடியை கடந்துள்ளது.