சென்னை: மிகப் பிரபலமான கல்கி ஆசிரமத்தின் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலக் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அடுத்த தடா அருகே உள்ள வரதப்பாளையம் ஆசிரமத்தில் காலையில் சோதனை தொடங்கியது. சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக கல்கி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.