ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை...கைது செய்ய வாய்ப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவரை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ கைது செய்தது. பின்னர்,  அவரை டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு மூன்று முறை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் தற்போது திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.  இது, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.  “ஐஎன்எக்ஸ் மீடியா  முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க எந்த தடையும் கிடையாது. மேலும், வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் அவரை  கைது செய்தும் விசாரிக்கலாம். இதில், காவலில் எடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்த வேண்டும். அவரை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிப்பதோ, கைது செய்வதோ என்பது அவரின் கண்ணியம்  சார்ந்த ஒன்றாக இருக்காது,’’ என உத்தரவிட்டார்.

தேவைப்படும் பட்சத்தில் அவரை உடனடியாக அங்கிருந்து கைது செய்து எங்களின் காவலில் அலுவலகத்தில் வைத்து விசாரித்து விட்டு வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம்,’ என நீதிபதியிடம் அமலாக்கத்  துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ப.சிதம்பரத்திடம் இன்று காலை 8 மணியளவில் திகார் சிறைக்கு சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், மனைவி நளினி சிதம்பரம் திகார் சிறைக்கு வருகை தந்துள்ளனர்.

Related Stories: