முதல்வர் குறித்து அவதூறு கார் டிரைவர் கைது

சென்னை: பேஸ்புக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவு செய்வதாக அதிமுக சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பள்ளிக்கரணையை சேர்ந்த கார் டிரைவர் பால்ராஜ் (49) என்பவர், முதல்வருக்கு எதிராக தொடர்ந்து அவதூறாக கருத்து பதிவு செய்தது தெரியவந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.

Related Stories: