×

தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிப்பா? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மதுரை: மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: சீமானின் கருத்து மிக தவறானது. ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதோ, அதே வெறுப்புணர்வை மீண்டும் உருவாக்க கூடிய வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது. பிரதமர் மோடி -  சீன அதிபர் வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியில் யார் பங்கேற்க வேண்டும் என்ற பட்டியலை தயாரித்ததில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.  

பிரதமர் வரவேற்பு நிகழ்வுகளில் முக்கிய நிர்வாகிகள் இடம் பெறுவது வழக்கம். இதில் எந்த பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை. ஒரு முறை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மறுமுறை பார்க்காத நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது  வழக்கமான ஒன்று. இந்த நடைமுறை மூத்த நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது தெரியாத நிர்வாகிகள் தவறாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்றார்.


Tags : supporters ,Tamils ,Radhakrishnan ,Pon.Radhakrishnan , Tamils , Interview ,Pon.Radhakrishnan
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!