புதுடெல்லி: இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.தமிழகத்தில் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ேபசிய மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து’’ என்றார்.இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.