தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்று சாட்சியம் அளிக்க நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இது குறித்து, தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் 14 கட்டங்களாக விசாரணை நடத்தியது. இதுவரை 380க்கும் மேற்பட்டோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.