அதிமுக பொதுக்குழு எப்போது? : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழு எப்போது நடக்கும் என்பது குறித்து  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். ராஜிவ் காந்தியின் இறப்பு பற்றிய பிரச்னையை இந்த காலகட்டத்தில் எழுப்பாமல் சீமான் தன்னுடைய கருத்தை தவிர்த்திருக்கலாம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அவர்களுக்கு கிடைத்த வெற்றியை கணக்கிட்டு கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றனர். ஆனால் அதன்பின்பு நடந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலின்போது அந்த நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 3ல் அதிமுகவும் மற்ற 3ல் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. எனவே வரும் காலங்களிலும் தற்போதைய நாங்குநேரி, விக்கிரவாண்டி, அதோடு வேறு எங்கு எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றிபெறும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது அன்றைக்கு இருந்த நிலைமை வேறு, தற்போது நிலைமை மாறியிருக்கிறது. மக்கள் தங்கள் முழு கவனத்தையும் அதிமுக பக்கம் திருப்பியுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அந்த தேர்தலை சந்தித்து வெற்றி பெறுகின்ற வகையில் அதிமுக தயாராக இருக்கிறது. அதிமுக பொதுக்குழு எப்போது நடக்க வேண்டுமோ அந்த நேரத்தில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: