மெக்சிகோ: மெக்சிகோவில் மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 14 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் மிசோகான் மாநிலத்தில் உள்ள அகுயிலா நகர் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிகம் உலவும் பகுதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அகுயிலா நகர் பகுதியில் வழக்கம்போல் போலீசார் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த ரோந்து பணியில் 2 வாகனங்களில் 18 காவலர்கள் சென்றிருந்தனர்.