புதுடெல்லி: ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தகவல் பெறுவதற்கு வசதியாக ஒரு இணைய பக்கம் ஒன்றை உருவாக்குவது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் கடந்த ஆகஸ்டு மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தது. அதில், தகவல் அறியும் உரிமை சட்டம் ஒரு வலுவான ஆயுதம் எனவும், இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தகவலை பெறுவதற்கு வசதியாக ஒரு இணைய பக்கத்தை உருவாக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. மேலும் இதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களும் எளிதாக தகவலை அறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவு
- தகவல் உரிமைக்கான வழக்கு: மத்திய மற்றும் மாநில அரசுகள்
- வழக்குக்கான தகவல் உரிமை: மத்திய மற்றும் மாநில அரசுகள்