திருவனந்தபுரம்: கொல்லத்தில் சொத்துக்காக தாயை அடித்து உதைத்து வீட்டு ேதாட்டத்தில் உயிரோடு புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் செம்மான்முக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மனைவி சாவித்திரி (72). இவர்களுக்கு சுனில் (51) என்ற மகனும், லாலி என்ற மகளும் உள்ளனர். சாவித்திரி பெயரில் சொத்துகள் உள்ளன. அதை எழுதி கேட்டு சுனில் தகராறு ெசய்துள்ளார். கடந்த மாதம் 3ம்தேதி சாவித்திரி மாயமானார். இது குறித்து லாலி, கொல்லம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். சுனில் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுனிலிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் தாயை அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.