திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வு ரகசியங்களை வெளிநாட்டுக்கு கடத்தியதாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான விஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு 1.30 கோடி நஷ்டஈடு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல்ைல மாவட்டத்தைச் சேர்ந்தவர் நம்பிநாராயணன். இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். கடந்த 1994ல் இந்திய விண்வெளி ஆய்வு ரகசியங்களை இவர் வெளிநாட்டுக்கு கடத்தியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் கேரள போலீசும், அதன் பிறகு சிபிஐயும் விசாரித்து வந்தது. இந்த விசாரணையில் இஸ்ரோ ஆய்வு ரகசியங்களை நம்பி நாராயணன் வெளிநாட்டுக்கு கடத்தவில்லை என்பது நிரூபணமானது. இதையடுத்து வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனக்கு 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.