நெல்லை: மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து எதிர்ப்போம் என ஏர்வாடியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஏர்வாடியில் பேசியதாவது: இஸ்லாமியர்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவோ செய்துள்ளார். அவரது வழியிலேயே நாங்களும் இஸ்லாமியர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம். ஹஜ் புனித யாத்திரை செல்பர்களுக்கு ஆண்டு தோறும் நிதி உதவி வழங்கி வருகிறோம்.