வீடியோ எடுத்து மிரட்டி பெண் பலாத்காரம் ஆட்டோ டிரைவரின் நண்பர் கைது: அரசியல் கட்சி பிரமுகரும் சிக்குகிறார்

சேலம்: சேலத்தில் வீடியோ எடுத்து மிரட்டி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஆட்டோ டிரைவரின் நண்பரை போலீசார் கைது செய்தனர். சேலம் அருகே வேம்படிதாளம் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). ஆட்டோ டிரைவரான இவர், வாலிபரை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதனிடையே மோகன்ராஜ், ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலாக பரவியது. பின்னர், அந்த வீடியோவில் இருந்த பெண் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மோகன்ராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து மீண்டும் கைது செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 10ம் தேதி சேலம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து மோகன்ராஜை கொண்டலாம்பட்டி போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ், கணவரால் கைவிடப்பட்ட ெபண்கள், விதவைகள் ஆட்டோவில் வரும் பெண்களை குறிவைத்து அவர்களை மயக்கி பலாத்காரம் செய்துள்ளதும், அதை வீடியோ எடுத்து அவர்களை தொடர்ந்து மிரட்டி காமவேட்டை நடத்தியுள்ளதும் தெரிய வந்தது.

மேலும் அவரது செல்போனில் இருந்து சில, வீடியோக்கள் சிக்கியுள்ளது. அந்த பெண்களின் விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.   மேலும், மோகன்ராஜின் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ டிரைவர்கள் சதாசிவம், மணிகண்டன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.  இதில் மோகன்ராஜ், தனது செல்போனை நண்பரான மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். அந்த செல்போனை பார்த்த மணிகண்டன், அதில் இருந்த ஆபாச வீடியோக்களை தனது செல்போனுக்கு மாற்றியதும், பிறகு அவரும் அந்த பெண்களிடம் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து, மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையே, இந்த வழக்கில் முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு மோகன்ராஜ், பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: