மும்பை: உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிக்ஞானந்தா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் ரஷ்யா, உக்ரைன், மலேசியா, சீனா, மங்கோலியா, அஜர்பைஜான் உட்பட 60 நாடுகளை சேர்ந்த 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். சிறுவர்கள், சிறுமிகளுக்கு தனித்தனியே யு14, யு16, யு18 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. யு18 ஓபன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா (14) பங்கேற்றார். ஜெர்மனி வீரர் வாலன்டின் பக்கெல்ஸ் உடன் மோதிய கடைசி போட்டியின் 11வது சுற்றின் முடிவில் 9 புள்ளிகள் பெற்றார். அதன்மூலம் யு18 பிரிவில் தங்கம் வென்றதுடன் சாம்பியன் பட்டமும் பெற்றார்.