மும்பை : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் உட்பட பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததன் காரணமாக பிசிசிஐ செயல்பாட்டை கண்காணிக்க நிவாகிகள் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது. லோதா கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் நிவாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.