வேலை வாங்கி தருவதாக 8 லட்சம் நூதன மோசடி

அண்ணாநகர்: கொரட்டூர், சீனிவாசபுரம், 3வது தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவருக்கு, குடும்ப நண்பர் முருகன் மூலம், கலைபுனிதன் என்பவர் அறிமுகமானார். இவர், சித்ராவின் மருமகனுக்கு மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக ₹10 லட்சம் கேட்டுள்ளார். அதில், முதல் தவணையாக கடந்த 2017ம் ஆண்டு 8.37 லட்சத்தை சித்ரா கொடுத்துள்ளார். ஆனால், கலைபுனிதன்  இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து சித்ரா அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் நேற்று மாலை வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், கலைபுனிதனிடம் விசாரிக்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: