புல்லட் ப்ரூஃப் பைகள்

நன்றி குங்குமம் தோழி  

அமெரிக்காவில் பள்ளிகளில் தொடர் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுவது நமக்கு தெரிந்ததே, ஆனால் இந்த முறை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் குண்டுகள் துளைக்காத புல்லட் ப்ரூஃப் பைகளை கொடுத்து பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் 200% விற்பனை வளர்ச்சியை இந்த பைகள் எட்டியிருக்கிறது. கடைகள் எங்கும் இந்த புல்லட் ப்ரூஃப் பைகள் தொங்கவிட்டிருப்பதை பார்த்து, மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

12 வயது சிறுமியின் இலவச நூலகம்!

கேரள மாநிலம் கொச்சியில் வசிக்கும் 12 வயது சிறுமி யசோதா. இவர் தன் வீட்டின் மேற் தளத்தை இலவச நூலகமா மாற்றியிருக்கிறார். நூலகங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், ஏழை மக்களுக்கு எப்படி கட்டுப்படியாகும் என்று, தன் தந்தையிடம் ஆதங்கப்பட்டுள்ளார் யசோதா. அவரின் மனக்குமுறலை போக்க அவரின் தந்தை முகநூல் மூலமாக தன் நண்பர்களிடம் யசோதாவின் இலவச நூலகத்துக்காக புத்தகங்கள் அனுப்புமாறு விண்ணப்பித்துள்ளார். இப்போது 3500க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், யசோதா நூலகம் ஆங்கிலம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் எனப் பல மொழி நூல்களுடன் நிறைந்திருக்கிறது.

Related Stories: