துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அடுத்த எழில் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணி (30). இவரது மனைவி ரேவதி (28). இவர்கள், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு தியா (5) என்ற குழந்தை உள்ளது. ரேவதியை பார்க்க அவரது தோழி மோனிஷா என்பவர், அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, மணிக்கும், மோனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இது ரேவதிக்கு பிடிக்காததால், மோனிஷாவை இனிமேல் எனது வீட்டிற்கு வரகூடாது என கண்டித்துள்ளார். இந்நிலையில், கணவர் மணி கடந்த ஒரு வருடமாக சரிவர வீட்டிற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி விசாரித்தபோது, மணி, மோனிஷாவுடன் தனியாக குடும்பம் நடத்துவது தெரிந்துள்ளது. இதுபற்றி, கணவரிடம் கேட்டபோது, “எனக்கும், மோனிஷாவுக்கும் திருமணம் நடந்துவிட்டது. நீ, வீட்டை விட்டு வெளியேறு. நாங்கள் இருவரும் அங்கு வந்து வசிக்கப் போகிறோம்” என கூறியுள்ளார்.